Tharagame Pasithagathudan Song

Lyrics

தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் வேகத்துடனே வாறேன் சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒரு போதுந் தள்ளிடே னென்றீர் 1.பாவமகலத் தேவ கோபமது ஒழியப் பாடுபட்டுயிர் விடுத்தீர் -பின்னும் ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச் சிலுவைதனிலே பகுத்தீர் மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று சேவித் துயிர்பிழைக்க தேவே உமையுட் கொள்ள 2.காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை கண்டுபிடித்தி ரட்சித்தீர்-அது பேணுதலுடன் பரிபூரண மடைந்திடப் பேருல குதித்தே னென்றீர் வேணுமுமது நீதி பூண நிறைவா யுன்றன் மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம் 3.தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம் தகமை எத்தனமாமே -யான் சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத் தேவசுத்தாவி தாமே உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான் சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1509
Song ID
tharagame-pasithagathudan
Views
7
Downloads
0
Source
Open