Lyrics
தரிசனம் தந்தவரே - என்னை
பெயர்சொல்லி அழைத்தவரே
என் தாயின் கருவில் என்னைக் கண்டவரே
தம் சித்தம் செய்ய என்னை அழைத்தவரே
மகிமை மகிமை உமக்கே மகிமை
இன்றும் என்றென்றும் உமக்கே மகிமை
இயேசுவே இயேசுவே
என்னை அழைத்த தெய்வம் நீர்தானையா
1.ஒன்றுக்கும் உதவா என்னை
உம் கண்கள் கண்டதையா
என் பலவீனங்கள் நன்கு அறிந்திருந்தும்
நீர் தயங்காமல் என் கரம் பிடித்தீர்
2.என் வாழ்வு முடிந்ததென்று
என் எதிரிகள் பரிகசித்தார் – ஆனால்
நீரோ என் வாழ்வினை தழைக்கச் செய்தீர்
என்னை கேதுரு மரம் போல் உயரச் செய்தீர்
3.அழைத்தவர் நீர்தானையா
தெரிந்தெடுத்தவர் நீர்தானையா
என் வாழ்க்கையின் ஓட்டத்தை தொடங்கியவர்
என்னை முடிவுபரியந்தம் நடத்திடுவீர்
Details
- Numeric ID
- 533
- Song ID
- tharisanam-thanthavare-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1