Lyrics
தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே கன
நேய ஆவியே
1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் மிக மாயும்
பாவி நான்
2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே மருள்
தீர்க்கும், தஞ்சமே
3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா ஒரு
பாவி நான் ஐயா
4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே தினம்
இதயம் அஞ்சவே
5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே அதைப்
புகழ்ந்து காக்கவே
6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே அவர்
கிருபை தேடவே
7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே மிகு
தெளிவு வேண்டவே
8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே மிக
சிறப்பாய் ஏற்றவே
Details
- Numeric ID
- 3803
- Song ID
- theeya-manathai-matra-varumlyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0