Lyrics
தேசமெல்லாம் செல்லுவோம்
சத்தியத்தை சொல்லுவோம் நம்
பூமியின் எல்லைகளை எல்லாம் நம்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்
1. அழிந்து போகும் ஆத்துமாக்களை
கண்முன் தெரியலையோ
மனிதரெல்லாம் நரகம் போவது
கவலை உனக்கில்லையா
2. கொஞ்ச காலமே இனியுள்ளதென்று
அறிந்த சாத்தானும்
துரிதமாக செயல்படுகிறது
நீ ஏன் தூங்குகிறாய்
3. இன்று செய்யாமல் என்று செய்தாய்
இதுவே கடைசி காலம்
எல்லோரும் அழிந்து போன பின்பு
யாரை தேடி செல்வாயோ
4. எல்லாரையும் நான் நேசிக்கிறேனே
என்று நீ சொன்னாலும்
சத்தியத்தை நீ சொல்லாவிட்டால்
உன் அன்பு வீணல்லவா
Details
- Numeric ID
- 3747
- Song ID
- thesamellam-selluvom-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0