Thirantha Vasal Namakkundu திறந்த வாசல் நமக்குண்டு
திறந்த வாசல் நமக்குண்டு
Lyrics
திறந்த வாசல் நமக்குண்டு
ஒருவனும் பூட்ட முடியாது
தேவன் திறந்திட்டட வாசலது
ஆசீர்வாதம் பெறுவோம்
1. கர்த்தர் நமக்கு முன்னே சென்று
கோணலானதை செவ்வையாக்கி
தடைகளை முற்றிலும் நீக்கியே
வாசலில் பிரவேசிக்க கிருபை செய்வார்
2. கர்த்தர் நமது பெயரைச் சொல்லி
அழைத்து ஆசீர்வதித்திடுவார்
உள்ளங்கையில் வரைந்தென்னை
நித்தம் காத்து நடத்திடுவார்
3. வெண்கலக் கதவை உடைத்திடுவார்
இருப்புத் தாழ்ப்பாளை முறித்திடுவார்
பொக்கிஷங்களும் புதையல்களும்
தேவன் நமக்குத் தந்திடுவார்
4. தேவனின் பரிசுத்த நாமத்தை
நமக்குத் தரித்து மகிழ்ந்திடுவார்.
தெய்வீக வெளிப்பாடு பெற்று நாமும்
அவருக்கு ஊழியம் செய்திடுவோம்
5. வெட்கப்படாமல், கலங்கிடாமல்
இன்றும் என்றும் வாழ்ந்திடுவோம்
எக்காள சத்தம் தொனிக்கையில்
அவரோடு நாமும் பறந்திடுவோம்
Details
- Numeric ID
- 5861
- Song ID
- thirantha-vasal-namakkundu-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open