Lyrics
திருமா மறையே அருள்பதியே நின்
திருச்சபை வளர நின்தயை புரியே
கருணை வாசகக் கதிர்பலத் தொளிர
கனகார் புவிநின்றே அகல
மருள்ஜன மொளியுற அவனரு ளுணர
யேசுநாமமெங் கணுமொளி வீச
இறையே நினை மெய் விசுவாச
நேச மோடேயுனின் தாசர்கள் பேச
ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்க
நயவாக் களித்தாய் எமக்குருக்குச்
சீலமதாயுனின் வசனமதுரைக்க
ஆறிரண்டு பேரான வருடனே
அமலா இருந்தாய் வெகுதிடனே
போரற அருளிய நேயமே போலே
நின்னையன்றிக் கட்டிட எமக்காகா
நேயா தூயா நினை வாகா
உன்னி உழைத்திடப் பலமளி யேகா
சத்ய போதகம் இத்தரைதனில் செழிக்க
தமியோர் நின் புகழே உரைக்க
நித்திய பாக்கியமே புவிக் களிக்க
Details
- Numeric ID
- 6346
- Song ID
- thiruma-maraiye-arulpathiye
- Views
- 0
- Downloads
- 0