Thirupatham Seramal திருப் பாதம் சேராமல்
திருப் பாதம் சேராமல்
Lyrics
திருப் பதம் சேராமல் இருப்பேனோ நான்
தெய்வத்தைத் தேடாமல் பிழைப்பேனோ
அருட்கடலாம் ஈசன் அடியவர் பாசன்
உருக்கம் நிறைந்த விண்ணுயிரான நேசன்
ஆவியும் ஆத்மமும் ஆண்டவர் பங்கே
பூவில் அவரல்லால் புகலிடம் எங்கே
சத்திய மார்க்கமும் சகலமுமான
நித்திய ஜீவனும் நிமலனுமான
ஆறுதல் தேறுதல் அளித்திடும் சேயன்
கூறு மகிமையில் சேர்த்திடும் தூயன்
உலையில் மெழுகு போல் உருகுதென் நெஞ்சம்
மலையாதுன் திருவடி வணங்கினேன் தஞ்சம்
Details
- Numeric ID
- 6106
- Song ID
- thirupaatham-seramal-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0