Lyrics
தூக்கி சுமக்கும் தோளினிலே
சிலுவை சுமந்ததேன்
என்னை தேடி வந்ததேன்
என்னை நாடி வந்ததேன்
பாவ பாரம் என்னில் நீங்க
பரனே வந்ததேன்
என்னை மீட்க வந்ததேன்
கரை மீட்க வந்ததேன்
வினை தீர்க்க வந்ததேன்
சிந்தும் இரத்தம் இடைவிடாமல்
என்னை அழைப்பதேன்
என்னை தழுவ வந்ததேன்
என்னை தழுவி நிற்பதேன்
என்னை தாங்க வந்ததேன்
காயங்கள் ஏற்ற கரங்களாலே
காக்க வந்ததேன்
என்னை மாற்ற வந்ததேன்
என்னை தேற்ற வந்ததேன்
என்னை ஆற்ற வந்ததேன்
விண்ணைப் பார்க்கும் உந்தன்
கண்கள் என்னை பார்ப்பதேன்
உந்தன் சிரமும் சாய்ந்ததேன்
உந்தன் கரங்கள் தளர்ந்ததேன்
காரிருளும் சூழ்ந்ததேன்
அப்பா உந்தன் அன்புக்கிடாய்
என்ன செய்குவேன்
நான் என்ன செய்குவேன்
உம்மை எங்கும் பாடுவேன்
உம்மை என்றும் நாடுவேன்
Details
- Numeric ID
- 406
- Song ID
- thookki-sumakkum-tholinile-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0