Thothiram Kirubai தோத்திரம் க்ருபை கூர் ஐயா
தோத்திரம் க்ருபை கூர் ஐயா
Lyrics
தோத்திரம் க்ருபை கூர் ஐயா
விழி பார் ஐயா விழி பார் ஐயா
பாத்திரம் இலா எனை நேத்திரம் என உச்சிதமாய்க்
காத்து வந்திடும் எனது கர்த்தாதி கர்த்தனே
இந்த நாள் அளவிலும் வந்த துன்பம் யாவுமே
என்றனை விட்டகலவே இரங்கிய தேவனே
மனதிலும் வாக்கிலும் மட்டில்லாத பாவி நான்
எனது தீதகற்றி ஆளும் ஏகாம்பர நாதனே
போதனே நீதனே புனித சத்ய வேதனே
கீதனே தாசர் துதி கேளும் யேசு நாதனே
Details
- Numeric ID
- 6807
- Song ID
- thothiram-kirubai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0