Lyrics
துதி கீதமே நான் பாடியே
புகழ் மாலை சூட்டுவேன்
என் வாழ்விலே நீர் செய்திட்ட
நன்மைகள் எண்ணி வாழ்த்துவேன்
என் நாவு உம் புகழ் பாடும்
உம் கிருபை என்னை சூழும்
வானத்தின் தூதர் சேனை
வாழ்த்துதே நித்தம் உம்மை
பூமியின் முழங்கால் யாவும்
முடங்கிடும் உந்தன் முன்னே
இயற்கையின் எழில்கள் யாவும்
இயேசுவின் புகழ் பாடும் -2
ஆழி அலையும் உயர்ந்த மலையும்
தேவன் உம் புகழ் பாடும்
2. சேற்றினில் அமிழ்ந்த என்னை
மீட்டிட ஜீவன் தந்தீர்
ஆவியின் கிருபை தந்து
ஆறுதல் பெருகச் செய்தீர்
அகமதில் தூய்மை தோன்ற
நாவு உம் புகழ் பாடும் ஆவியோடும்
உண்மையோடும் ஜீவன் உம்மை போற்றும்
3. வாசல்கள் தலையை உயர்த்தும்
வல்லவர் மகிமை பெருகும்
வானிலும் பூவில் எங்கும்
தேவனின் துதிகள் நிறையும்
மனங்களில் தூய்மை தோன்றும்
உலகினில் பாவம் மறையும்
தேவன் உந்தன் ஆட்சி எங்கும்
அன்பு ஒன்றே வாழும்
Details
- Numeric ID
- 2500
- Song ID
- thuthi-geethame-nan-padiye-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0