Thuthi Paliyai Seluththa Song துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா
துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா
Lyrics
துதிபலியை செலுத்த
வந்தோம் இயேசையா
உம்மை ஆராதிக்க
கூடி வந்தோம் இயேசையா
நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்
இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே
என்னிலே ஒன்றுமில்லை
ஆனாலும் நேசித்தீரே
என்னிலே நன்மையில்லை
ஆனாலும் உயர்த்தினீரே
தகப்பனை போல என்னைச் சுமந்தீரையா
ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
சுமந்தீரையா தேற்றினீரே
ஆராதனை உமக்கே ஐயா எங்கள்
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐயா
பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்
ஒரு கண்ணும் என்மேலே
இரக்கமாய் இருந்ததில்லை
பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
உம் மகனாகவே
என்னை ஏற்றுக்கொண்டீர்
பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
ஆராதனை உமக்கே ஐயா
உமது இரக்கத்திற்கு
முடிவே இல்லையாப்பா
உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா
உமது காருண்யம் என்னை பெரியவனாய்
உயரத்திலே நிறுத்தியதே
Details
- Numeric ID
- 6232
- Song ID
- thuthi-paliyai-seluththa
- Views
- 1
- Downloads
- 1