Lyrics
உலகில் நீ ஓர் தனிப்பிறவி
உன்பால் இயேசு அருள் மேவி
தமது ஜீவனை உன்மேல் ஊதி
பாருக்குள் அனுப்பினார் இது பாரீர்
உலகின் கண்ணிற்குப் புரியாத
கல்வியில் சான்றோர்க்கு விளங்காத
வாழ்க்கை ஒன்றே நீ மேற்கொண்டுள்ளாய்
கவனம் கவனம் முன் ஏகிச்செல்வாய்
2. சிரிப்பார் சீறுவார் முணுமுணுப்பார்
உன் நிலை அறியாத மனிதர் பலர்
உன் ஜெபம் பாட்டு பேச்சு எல்லாம்
புரியார் பலர் உன்னைப் பகடிசெய்வார்
3. கிறிஸ்துவைவெளித்தள்ளி கொலைசெய்தோர்
பக்தர்கள் பலரையும் சிறைசெய்தோர்
கம்பத்தில் கட்டி வதை வதைத்தோர்
பலரும் இப்பூமியில் நிரம்ப உண்டு
4. தயக்கமும் கலக்கமும் நடையில் வேண்டாம்
லௌகீக கவலைகள் எதுவும் வேண்டாம்
கல்வாரி மேட்டினில் கடை மனிதன்
ஏறும்வரை நாம் உறங்கவேண்டாம்
Details
- Numeric ID
- 1690
- Song ID
- ulagil-nee-oru-thanipiravi-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0