Ulagil Paava Songs Lyrics உலகில் பவப் பாரத்தால் சோரும் இளைப்
உலகில் பவப் பாரத்தால் சோரும் இளைப்
Lyrics
உலகில் பாவப் பாரத்தால் சோரும் இளைப்
பூர்ந்த நரரே வந்து சேரும்
அலைசடிப் பட்டவரே வாரும் என்றன்
ஆறுதலால் அவற்றைத் தீரும்
பாவி என்றெண்ணித் திகைப் போரும் என்றன்
பாவம் தீராதென் றிருப் போரும்
ஆவலாய் ஓடி வந்து சேரும் நான்
ஆகாமியர்க்காக வந்த தோரும்
இளமை என்றே எண்ணி நில்லாதே சாவும்
இளமை என்று சொல்லிச் செல்லாதே
வளமாய் வருவதைத் தள்ளாதே கெட்ட
வழக்க மிதையே கைக் கொள்ளாதே
வாலிப ப்ராய மிதில் நாளும் இன்ப
வாழ்வு சுகிக்கவென்று மாளும்
சீலரே இன்றென் னுரை கேளும் அவை
சேர்க்கும் நரகத்தில் எந்நாளும்
காலம் கடந்த கிழவோரே வீணாய்க்
காலம் கழித்தே உழல்வோரே
காலமே தேட மறந்தாரே உங்கள்
கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே
Details
- Numeric ID
- 7458
- Song ID
- ulagil-paava-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0