Lyrics
உளையான சேற்றில் இருந்து
தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேலே
என்னை நிற்கச் செய்தீரே -2
உம் தூய அன்பென்னை அணைத்ததே
உம் நேசம் இன்பமே என்றுமே
உந்தன் அன்பிற்காக ஏங்குகிறேன்
வேறே விருப்பம் இல்லை
உம்மை விட்டு எங்கு செல்லுவேன்
நீர் என் அன்பரே
2. மனம் போன போக்கில் போனேன்
அதில் திருப்தி இல்லையே
ஆஸ்தி செல்வம் சேர்த்தேன்
அதில் நிறைவு இல்லையே
உம்மை அறிந்து கொண்டது பாக்யமே
உம்மோடு வாழ்வது மேன்மையே
3. உம் சித்தம் என்னில் நிறைவேற செய்யுமே
உம் ஏக்கம் என்றும் நான் அறிய செய்யுமே
என் வாழ்வை முற்றிலும் தருகிறேன்
உம் மகிமைக்காகவே வாழுவேன்
எவ்வளவாய் நேசித்தீர்
உம் அன்பினால் நிறைத்தீர்-2
கல்வாரியில் உம்
தியாகத்தை கண்டேனே-3
Details
- Numeric ID
- 1686
- Song ID
- ullaiyaana-setril-irunthu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0