Lyrics
உள்ளம் ஆனந்தம் கொண்டாடுமே
இன்று இயேசுவை கண்டுகொண்டேன்
வெள்ளம் போல உள்ளம் நிறைந்து
நன்றி பாடுவேன் என்றென்றுமே
தன் ஜீவன் தந்து புது வாழ்வை ஈந்த த (2)
பொன் ராஜாதி ராஜனுக்கே ஸ்தோத்திரம்
1. கிருபைகள் ஆயிரம் அளவின்றி என் மீது
பொழிந்தீரே என் இயேசுவே
உமக்கென்று தகுதிகள் என்னுள் இல்லா
போதும் - கனிவோடு கரை சேர்த்தீரே
உம்மை என்னென்று நான்
போற்றுவேன் - ஐயா என் ஜீவ நாயகனே
வாழும் காலங்கள் உம் தயவை
எண்ணி சேவிப்பேன் என் நாதனே
என் இதயம் நன்றியால் நிறையும்
உம் கிருபை என்னை ஆதரிக்கும்
2. இரக்கங்கள் ஆயிரம் சோராது காட்டிடும்
இரக்கத்தின் ஐசுவரியமே
எனக்காக யாவையும் செய்து முடித்திடும்
என் ஆத்ம மணவாளனே
ஆவியானவரே சரணம்
அன்பின் ஆதரவே சரணம்
மகிமை ராஜனுக்கே சரணம்
மகா வல்ல தேவா சரணம்
ஏற்றுக்கொள்ளும் என்னையே தலைவா
நேற்றும் இன்றும் மாறா இறைவா
Details
- Numeric ID
- 1675
- Song ID
- ullam-aanantha-konndaadungal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0