Lyrics
உள்ளமெல்லாம் உருகுதய்யா உம்
கல்வாரி காட்சி கண்டு என்
தேகமெல்லாம் நடுங்குதய்யா உம்
சிலுவையின் பாடு கண்டு உம்
சிலுவையின் பாடு கண்டு
மகிமை மாட்சிமை மறந்து விட்டு
மனிதனாய் ஏன் பிறந்தீர்
மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம்
மகிமை மறந்தீரோ மனு
உருவாய் பிறந்தீரோ மனு
உருவாய் பிறந்தீரோ
இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண
காயங்கள் ஏன் அடைந்தீர்
இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவே
இரத்தத்தை வடித்தீரோ தேவ
சித்தத்தை முடித்தீரோ தேவ
சித்தத்தை முடித்தீரோ
அன்பின் ரூபம் ஆனவரே உம்
மேல் ஆணிகள் பாய்ந்ததேனோ
ஆணவத்தால் நான் செய்த
பாவங்களே கூர் ஆணியாய் மாறியதோ
உம் மேனியில் பாய்ந்ததுவோ
உம் மேனியில் பாய்ந்ததுவோ
Details
- Numeric ID
- 417
- Song ID
- ullamellam-urukuthayya-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0