Lyrics
உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே
புத்தியுள்ள ஆராதனை
சரீரத்தை பரிசுத்தம் செய்வதே
புத்தியுள்ள ஆராதனை-2
தேவா இரக்கத்தை வேண்டி நிற்கிறோம்
எங்கள் ஆவி ஆத்துமா ஒப்புவிக்கிறோம்
இறங்கி வாரும் கிருபை தாரும்
தேவ ஆவியே
1. வானையும் பூமியையும் படைத்தவரே
வானங்கள் மேலாக உயர்ந்தவரே
நேசக் கர்த்தாவே சாரோனின் ரோஜாவே
இறங்கி வாருமையா
2. ஆவியின் வல்லமையால் நிரப்பிடுமே
அளவில்லா உம் கிருபை ஊற்றிடுமே
கிச்சிலி மரமே மருதோன்றி பூங்கொத்தே
இறங்கி வாருமையா
3. சாபத்தை சுட்டெரிக்கும் அக்கினியே
பாவத்தின் கட்டறுக்கும் பட்டயமே
சேனையின் கர்த்தாவே நித்திய ராஜாவே
இறங்கி வாருமையா
4. மரணத்தை ஜெயமாக வென்றவரே
மகிமையில் என்னை கொண்டு சேர்ப்பவரே
விடிவெள்ளி நட்சத்திரமே பிரகாக
பேரொளியே இறங்கி வாருமையா
Details
- Numeric ID
- 1683
- Song ID
- ullaththai-jeeva-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0