Lyrics
1. ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை
உமது சாயலில் சிருஷ்டித்தீர்
நித்திய அன்பென் மேல் கொண்டதால்
குமாரனைத் தந்து இரட்சித்தீரே
உம் மகா கிருபைக்காய்
உம்மை நான் துதித்திடுவேன் என்றும்
2. பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்க
கோர பாடுகள் ஏற்றீரன்றோ
தழும்புகள் உந்தன் மேனியிலே
எந்தனுக்காய் நிந்தை ஆனீரோ
3. நித்திய-ஜீவனும் மோட்ச வாழ்வும்
பாவி எனக்காய் வாக்களித்தீர்
கிருபையாலே தம் ஆவீ தந்து
வின்-ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர்
4. கிரகிக்க முடியா நன்மைகள்
என் ஆடை வின்னவர் நல்கினார்
எல்லா தீமையினின்றும் என்னை
கண்மணி போல காத்திடுவார்
5. அழியா வின்-உரிமை எனக்குண்டு
இயேசுவின் திவ்ய சந்நிதியில்
நீதியின் கிரீடம் சூட்டிடுவார்
வின் வாழ்வையும் பரிசளிப்பார்
Details
- Numeric ID
- 703
- Song ID
- um-maga-kirubaikkai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0