Lyrics
உமது கிருபை தாரும் தேவா
எனது பெலவீன நேரமதில் -2
சாவுக்கு ஏதுவான சரீரமதை -2
உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே
1. காருண்ய மா நல் வைத்தியரே
கருணையின் கரத்தை நீட்டிடுமே-2
வாடிடும் இதய வேதனை நீங்க
வல்லவர் இயேசுவே தாங்கிடுமே -2
2. சாவையும் நோவையும் ஜெயித்தவரே
சந்ததம் உம் பெலன் அளித்திடுமே
ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும்
அன்பரே சுகமே ஈந்திடுமே
3. லாசருவே உம் வார்த்தையினால்
அழைத்துமே உயிர் தந்த தெய்வமல்லோ
யாவையும் எனக்காய் சிலுவையில் முடித்த
இதயத்தின் அரசே இரங்கிடுமே
4. உந்தனை அல்லால் இவ்வுலகில்
எந்தனை சுகமாக்க யாருமில்லை
வார்த்தையை அனுப்பி வல்லமை விளங்க
அற்புத சுகமே ஈந்திடுமே
5. பாவங்கள் சாபங்கள் யாவையுமே
சிலுவையில் சுமந்து முடித்தவரே
கருணை பிரவாகா இரக்கத்தின் உருவே
இரங்கி சுகமே அளித்திடுமே
Details
- Numeric ID
- 2132
- Song ID
- umathu-kirupai-thaarum-thaevaa-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0