Lyrics
உம்மை ஆராதிக்கின்றேன் (2)
உணர்ந்து ஆராதிக்கின்றேன்
உள்ளம் மகிழ்ந்து ஆராதிக்கின்றேன்
உள்ளங்கையில் என்னை வரைந்தவர்
என் உள்ளமெல்லாம் நன்கு அறிந்தவர்
என்னை என்றும் நடத்தும் அன்பு இயேசையா
1. கண்ணீர் நதி என்னில் புரண்டாலும்
மூழ்கி நான் போவதில்லை
காரிருளில் நான் நடந்தாலும்
பாதை நான் மாறவில்லை
கர்த்தாவே உந்தன் சத்துவமே
நித்தமும் தாங்கிட வாழ்வேன் (2)
2. ஆதியும் அந்தமும் ஆனவரே
அனுகூல மானவரே
ஆளுகை செய்திடும் என் தேவனே
உம்மை ஆராதனை செய்கிறேன்
அந்தி சந்தி மத்தியானத்திலும்
தியானம் பண்ணி நான் முறையிடுவேன்
என் சத்தம் கேட்பீர் செவி கொடுப்பீர்
என்றென்றும் பதில் தருவீர்
3. காலத்தால் மாறாத உம் வாக்குகள்
என் நெஞ்சில் ஆறுதலே
காரிருள் போன்ற சோதனையில்
எனைக் காக்கும் ஆயுதமே
கால்களுக்கு அது தீபமாமே
பாதைக்கு அது வெளிச்சமன்றோ
எப்போதும் நடப்பேன் வெளிச்சத்திலே
உம் பாதம் சேர்வேன் இயேசையா
Details
- Numeric ID
- 2070
- Song ID
- ummai-arathikindrom-ummai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0