Ummai Kaanaamal Song உம்மைக் காணாமல்
உம்மைக் காணாமல்
Lyrics
உம்மைக் காணாமல் என் உள்ளம் வாடுதைய்யா
எந்நாளும் என் ஆத்துமா உம்மையே வாஞ்சிக்குதே
எந்நாளும் உம்மை வாஞ்சிக்குதே
உம்மைக் காணாமல் உள்ளம் வாடுதைய்யா
1.மானைப் போல் நீரோடைகளை
வாஞ்சித்துக் கதறுமாப் போலவே
என் ஆத்துமா என் ஆத்துமா
பரலோக தேவனை வாஞ்சிக்குதே
2.எப்பக்கம் போனாலும் உம் நினைவே
உமது சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
என் தேவனே என் தேவனே
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்குதே
3.வறண்ட நிலம் போல் வாடுகிறேன்
ஜீவத்தண்ணீரை ஊற்றுமைய்யா
ஜீவநதி பாயட்டுமே எந்நாளுமே
உம்மில் வாழ்ந்திடவே
4.கணுக்கால் அளவு போதாதைய்யா
முழங்கால் அளவும் போதாதைய்யா
மூழ்கணுமே மூழ்கணுமே
பேரின்ப நதியில் நான் மூழ்கணுமே
Details
- Numeric ID
- 7449
- Song ID
- ummai-kaanaamal-song-lyrics-chords-ppt-pas-lucas-sekar
- Views
- 1
- Downloads
- 1