Ummai Than Nambi உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா

உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா

Lyrics

உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யா உம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லை சார்ந்து கொள்ள இடமில்லை நித்திய கன்மலையே அசையாத பர்வதமே அரணான கோட்டையே நான் நம்பும் கேடகமே உம்மை என்றும் நம்பியுள்ளேன் வெட்கப்பட்டு போவதில்லை (நான்)வெட்கப்பட்டு போவதில்லை 1.நான் போகும் பயணம் தூரம் யார் துணை செய்திடுவாரோ யாக்கோபின் தேவன் துணையே என்னை வழிநடத்திடுவார் தடைகள் யாவும் நீக்கி என்னை வழி நடத்திடுவார் நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே நித்திய வாழ்வைக் காண என்னையும் சேர்த்திடுவாரே 2.மாயை நிறைந்த உலகினிலே நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே எதை நான் சார்ந்து போனாலும் கானல் நீரைப் போல் மறையுதையா என்றென்றும் என்னை விட்டெடுப்படாத நல்ல பங்கு நீர் தானையா இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் 3.பொல்லாப்பு நிறைந்த உலகில் யார் என்னை காத்திட கூடும் கர்த்தர் நகரத்தை காவாராகில் காவலாளியும் விருதாவே கர்த்தர் என் நடுவில் இருக்கையில் தீங்கை நான் காண்பதும் இல்லையே தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் தீயையும் தண்ணீரை கடந்தென்னை செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6072
Song ID
ummai-than-nambi-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
4
Source
Open