Lyrics
உம்மை விட்டால் யாருமில்லை
இயேசுவே நீரே என் தஞ்சமே
1. தாயில்லாத எனக்கு
தாயும் நீர்தானையா
தகப்பனற்ற எனக்கு
தகப்பனும் நீர்தானையா
2.உறவினர் இருந்தாலும்
உதவுவார் இல்லை ஐயா
நண்பர்கள் இருந்தாலும்
நன்மை செய்வார் இல்லையையா
3. அன்புக்காய் ஏங்கிய என்னை
அன்பு கூர யாருமில்லை
நாதியற்ற உலகத்திலே
நாடி வந்தேன் நீர் தஞ்சமே
4. கைவேலையல்லாத
உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன்
எப்போ வருவீரென்று
எதிர் நோக்கி நிற்கின்றேன்
Details
- Numeric ID
- 2015
- Song ID
- ummai-vittal-yaarumillai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0