Lyrics
உம்மை விட்டு தூரம் போனேன்
உம்மை மறந்தேன்
அன்பாய் நீர் தந்த உறவை விட்டு
எங்கோ சென்றேன்
நீர் தந்த வாழ்வை
எனதென்று நினைத்தேன்
ஆனால் நீர் கைவிடாமல் அன்பு கூர்ந்தீர்
எங்கு சென்றாலும் எதை செய்தாலும்
நீர் இல்லாமல் (2)
என் பாடலில் ராகம் இல்லை
நீர் இல்லாமல்
என் இதயம் துடிப்பதில்லை
நீர் இல்லாமல்
என் பகலில் வெளிச்சமில்லை
நீர் இல்லாமல்
வாழ்வில் அர்த்தமுமில்லை
நீர் இல்லாமல்...
2. வானத்திலே நான் உயர பறந்தாலும்
பூமியின் எல்லையெங்கும்
கடந்து சென்றாலும்
பணம் பெயர் புகழ்ச்சி
எனக்கெல்லாம் இருந்தாலும்
நீர் இல்லா வாழ்வு என்றும் வெறுமையே
Details
- Numeric ID
- 2012
- Song ID
- ummai-vittu-thooram-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0