Lyrics
உன்னத தேவன் இயேசுவிலே
பூரணராய் வளர்ந்திடுவோம்
ஆவியினாலே பெலன் அடைந்து
மறுரூபம் அடைந்திடுவோம்
1.கர்த்தர் நம் இயேசுவை ஆவியினால்
நிரப்பியே நிறைத்தனரே
அளவில்லாமல் ஆவியினால்
நிறைந்துமே பெலன் அடைவோம்
2.வானம் திறந்து தேவனுமே
சாட்சியும் அளித்தனரே
இயேசுவைப் போல் ஆவியினால்
சாட்சியை அடைந்திடுவோம்
3. ஆவியினாலே இயேசு பரன்
என்றுமாய் வழி நடந்தார்
ஆவியினால் நடத்தப்பட
நம்மையே படைத்திடுவோம்
4. தேவனின் சித்தம் செய்திடவே
இயேசுவே அடி பணிந்தார்
தேவ சித்தம் செய்திடவே
கர்த்தரில் அடங்கிடுவோம்
5. உன்னத ஆவியின் பெலனடைந்து
ஜீவியம் செய்திடுவோம்
பயமில்லாமல் தைரியமாய்
துணிந்துமே முன் செல்லுவோம்
Details
- Numeric ID
- 1669
- Song ID
- unnatha-thaevan-yesuvilae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0