Lyrics
உன்னதத்தில் உயர உள்ள ஜேசுவே
உம்மை கனத்துடன் நாங்கள் இங்கு
ஆராதிக்க கூடி உள்ளோம்.
உன்னதத்தில் உயர உள்ள ஜேசுவே
உம்மை கனத்துடன் நாங்கள் இங்கு
ஆராதிக்க கூடி உள்ளோம்.
நீர் மகிமையும் கனத்துக்கும் பாத்திரர்
உம் மகிமையை எவருக்கும் விட்டு கொடுக்காதவர்.
ஆலையம் செல்வதே உயிர் மீட்சியை தந்திடுதே.
உம் வார்த்தையை கேட்டிட உள்ளம் வாஞ்சித்து கதறுதே.
ஆலையம் செல்வது மகிழ்ச்சியை தந்திடுதே
உம் வார்த்தையை கேட்டிட மனம் வாஞ்சித்து கதறுதே.
கடந்த இரவை கண்ணின் மணிபோல காத்து கொண்டீரே நன்றி.
புதிய நாளை காணச்செய்து கிருபை தந்தீரே நன்றி.
ஒவ்வொரு ஆத்துமாவும் உந்தன் கரத்தின் ஈவுகள்.
உம் முகத்தை நாங்கள் பார்க்கையில்
உம் மகிமை அழகாய் விளங்குதே.
ஒவ்வொரு ஆத்துமாவும் உந்தன் கரத்தின் பொக்கிஷங்கள்.
உம் முகத்தை நாங்கள் பார்க்கையில்
உம் மகிமை என்றும் விளங்குதே.
என் வாயின் வார்த்தை எண்ணம் யாவும்
உமக்கு பிரியமாய் மாறும்.
உம் சித்தம் அறிந்து உமக்காய் ஓட
புதிய பெலனை என்னுள் தாரும்.
Details
- Numeric ID
- 638
- Song ID
- unnathathil-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1