Urangaatha Kannkal Ennil Thaarum உறங்காத கண் என்னில் தாரும் தேவா
உறங்காத கண் என்னில் தாரும் தேவா
Unknown
Lyrics
Lyrics
உறங்காத கண் என்னில் தாரும் தேவா
அழிகின்ற கண்ணீரும் வேண்டும் -2
அழிகின்ற ஆத்துமா பாரம் வேண்டும்
இர்வும் பகலும் நான் புலம்ப வேண்டும் -2
1. அறியாத மக்கள் பல கோடியாக
தினம்தோறும் அழிகின்றாரே -2
திறப்பின் வாசலில் நின்று நான் கதற
என்னையே தந்தேன் ஏற்றுக்கொள்ளும் -2
2. சாத்தானின் தந்திர வலையினில் எங்கள்
தேசத்தின் ஜனம் வீழுதே
அடிமைகள் நுகத்தை முறித்திட
எந்தன் கைகளில் வலிமை தந்திடுமே
3. மேய்ப்பனில்லாத ஆடுகள் போல
ஜனக்கூட்டம் சிதறிடுதே
மெய்யான ஆயன் உம்மை நான் காட்ட
எந்தனின் மீது கருணை கூரும்
Details
- Numeric ID
- 1673
- Song ID
- urangaatha-kannkal-ennil-thaarum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0