Lyrics
பலவான்கள் கண்கள் முன்பாக
பலவீனரைத் தூக்கி உயர்த்துவீர்
பலகணிகள் திறந்து
பரலோக பலத்தால்
பலவீனன் என்னையும் நிரப்பிடுவீர்
உயர்த்துகின்றோம் போற்றுகின்றோம்
கரங்களைப் பிடித்து உருவாக்குமே!
1. தகுதியற்றவன் ஆனாலும்
தகப்பனைப் போல அணைப்பவரே
குழியில் தூக்கிப் போட்டாலும்
குனிந்து தூக்கி எடுப்பவரே!
அலை கடல் என்னை எதிர்த்து வந்தாலும்-என்
அஸ்திபாரமாய் இருப்பவரே!
2. குறைகள் என்னில் இருந்தாலும்
குயவனைப்போல வனைபவரே
உடைத்து நொறுக்கிப் போட்டாலும்
உயிர்பெற ஜீவன் தருபவரே!
புரளும் வெள்ளங்கள் சூழ்ந்து நின்றாலும்-என்
புகலிடமாய் இருப்பவரே!
Details
- Numeric ID
- 651
- Song ID
- uruvaakkumae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1