Lyrics
உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் யாம்
உதவி செய்திடவே
உதவி செய்தருள் மோட்ச
உசிதக் கோனே நீ பூவில்
பதவி தந்திட வந்த போதினின்
பலருக்குதவின பான்மை போலவே
ஒருவரொருவர்க்காய் சிலுவை தூக்க
ஒத்தாசை தருவாய்
தருண நேச சகாயம் சகலர்க்கும் பிரிய
சகோதரன் படும் கஷ்சங் கவலையில்
சன்மனத்தொடு பங்கு பெற்றிட
உன்னன்பு தொடவே எம்முள்ளங்கள்
ஒன்றாய்ப் பொருந்தவே
எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட
உன் தயை செயல் தந்து மேற்பட
பிரியாமல் உனையே பற்ற எமக்குப்
வெலன் தா நீ துணையே
நிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தை
நிதமு மதிலே மிக வுய்திடவே
மாசற்ற பளிங்காய் ஒளிருமுன் மாணன்பு மிகவாய்
ஆசற்ற குணமணி கோர்க்கும் பொற் சரடதே
அழிவிலாததை எமக்குள் அணிந்திட
ஆர்ந்துன் சிந்தையை நேர்ந்து செய்திட
Details
- Numeric ID
- 5812
- Song ID
- uthavi-seitharule
- Views
- 1
- Downloads
- 1