Lyrics
வாக்குத்தத்தங்களாம்
ஜீவ தேவனின் வார்த்தைகளாம்
ஒருபோதும் மாறிடா தேவனின்
ஜீவ வார்த்தைகளாம்-2
1. கேள்வியாம் மனித வார்த்தையினால்
மானிடன் மனமும் நொந்திடுதே-2
கேள்வியாம் தேவ வார்த்தையினால்
விசுவாசம் உள்ளத்தில் வந்திடுதே-2
2. கரை சேர விரும்பும் மனிதனையே
கரையினில் சேர்ப்பேன் என்றாரே
இளைப்படைந்தோர் யார் எவராயினும்
இளைப்பாறுதலை தந்திடுவார்
3. தம்மை விசுவாசிக்கும் மனிதனுக்கு
யாவும் கை கூடிடும் என்றாரே
விசுவாசிப்பவர் யார் எவராயினும்
தேவ மகிமையைக் கண்டிடுவார்
Details
- Numeric ID
- 1800
- Song ID
- vaakkuthathangal-jeeva-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0