Vaanam Boomiyo Paraaparan Manidan வானம் பூமியோ? பராபரன்
வானம் பூமியோ? பராபரன்
Lyrics
வானம் பூமியோ? பராபரன்
மானிடன் ஆனாரோ? என்ன இது?
ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது?
1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை,
பூபதி வந்ததே அதிசயம்!
2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
நித்ய பிதாவினோர்ம
கத்துவக் குமாரனோ இவர்?
3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி!
4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்லளூ
மாறில்லாத ஈறில்லாத
வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்!
5. சீயோனின் மகளே, இனி திரிந்தலையாதே
மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
வந்தவர் மணவாளனல்லவோ?
Details
- Numeric ID
- 5234
- Song ID
- vaanam-boomiyo-paraaparan-manidan-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1