Lyrics
வானம் மீதிலே என் மன்னன் வருவார்
மகிமையோடு என்னை ஏற்றுக் கொள்ளூவார்
நான் அங்கே போவேன் ஆர்ப்பரிப்பேன் – என்
ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்
1. துன்பமில்லை அங்கே தொல்லைகளில்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்
2. நான் நடக்கும் இடமோ தங்க மயமாம்
நான் தங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
தூதர்கள் போல நானும் இருப்பேன் – என்
தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்
3. என் நேசர் என்றும் என்னோடிருப்பார்
நானும் என்றும் அவரோடிருப்பேன்
தூதர்கள் போல அவர் அருகினிலே
என் பரிசுத்தர் பாதம் பணிந்திடுவேன்
Details
- Numeric ID
- 3843
- Song ID
- vaanam-meethilae-en-mannan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0