Lyrics
வானம் திறந்து தேவ மகிமை
பெருமழை போல் ஊற்றிட வாஞ்சிக்கிறோம்
தூய ஆவி என்னை அனலாய்
இன்னும் நிரப்பிட என் உள்ளம் ஏங்கிடுதே
ஜீவ நதியில் மூழ்கி தவிக்க
என்னை முழுவதும் தருகிறேன்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
என் வாழ்வில் எல்லாம் செய்யும்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
முடியாததை முடிய செய்யும்
1. உம் ஆவி ஊற்றப்பட்டால்
மரித்தவை உயிர் பெறுமே
எந்த சூழ்நிலையும் என்னை தள்ளாமலே
காத்திடும் உம் பிரசன்னம்
2. உம் ஆவி ஊற்றப்பட்டால்
தடைகளும் வழி விடுமே
கண்ணீர் கவலைகள் யாவையும்
சந்தோசமாய் மாற்றிடும் உம் பிரசன்னம்
Details
- Numeric ID
- 2249
- Song ID
- vaanam-thiranthu-deva-magimai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0