Vaanangalil Uyarnthavaram Nam வானங்களில் உயர்ந்தவராம் நம்
வானங்களில் உயர்ந்தவராம் நம்
Lyrics
வானங்களில் உயர்ந்தவராம் நம்
வல்ல தேவன் இயேசுவை துதியுங்கள்
கைத்தாள ஓசை எழுப்பி காத்தர்
அவரின் நாமத்தை புகழுங்கள்-2
1. வான தூதர் சேனைகளே
கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா
சூரிய சந்திர நட்சத்திரங்களே
அவரைத் துதியுங்கள் (2) அல்லேலூயா
என்றும் நம்மை ஆள்பவராம்
நம் இயேசுவை துதியுங்கள் (2)
2. கல்மலையே அக்கினியே
கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா
உறைந்த மழையே மூடு பனியே
அவரை துதியுங்கள் அல்லேலூயா
இயேசுவின் நாமம் என்றும் உயர்ந்தது
என்றே துதியுங்கள்
3. பூமியின் சகல ஜாதிகளே
கர்த்தரை துதியுங்கள் வாலிபர் கன்னியர்
பிள்ளைகளே அவரை துதியுங்கள்
இயேசுவே என்றும் எங்கள் தெயவம்
என்றே துதியுங்கள்
4. நடனத்தோடு இயேசுவின் நாமம்
போற்றிப் பாடுங்கள் கின்னரம் ஓசை
கீதமெழுப்பி கீர்த்தனம் பண்ணுங்கள்
வருக உமது ராஜ்யம் என்றே
வாழ்த்திப் பாடுங்கள்
Details
- Numeric ID
- 6691
- Song ID
- vaanangalil-uyarnthavaram-nam-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open