Vaaraa Vinai Vanthaalum Song Tamil Christian Keerthanai Song
Lyrics
வாரா வினை வந்தாலும் சோராதே மனமே
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும்
சோராதே ஏசுபரன் தஞ்சம் விடாதே
உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்
உறுதிவிட்டயராதே நெறி தவறாதே
பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே
தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவரோ அன்பு கொள்ளவர் மீதே
மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்
மருள விழாதே நல் அருளை விடாதே
வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ
வானவனை முற்றும் தான் அடைவாயே
Details
- Numeric ID
- 6356
- Song ID
- vaaraa-vinai-vanthaalum-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0