Lyrics
வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் சற்றும்
மாசிலா நம் யேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோன் ஆ
1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனா-இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார்
2.மா பதவியை இழந்து வறியர் ஆனநாம் -அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்
3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்
4.மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்
5.பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே -அவர்
பட்சம் வைத்துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார்.
Details
- Numeric ID
- 6773
- Song ID
- vaarum-naam-ellarum
- Views
- 0
- Downloads
- 0