VAIYAGAM THANNAI KEERTHANAI SONG TAMIL CHRISTIAN KEERTHANAI SONG
Lyrics
வையகந்தனை நடுத்தீர்க்க இயேசு
வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க!
பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க,
பொற்பதிதனிற் பரன் சேயரைச் சேர்க்க.
வானங்கள் மடமடப்போ டொழிந்திடவே,
மாகிதலம் அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே;
பானுவுன் மதி யுடு அனைத்தும் மங்கிடவே,
பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே.
முக்கிய தூதனெக்காளமே தொனிக்க,
முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க,
ஆக்கணமுயிருள்ளோர் மறு உருத்தரிக்க,
ஆண்டவர் வருகிறார், பக்தர்கள் களிக்க.
யாவரின் சிந்தை செய்கையும் வெளிப்படற்-கு
இரண்டு புத்தகங்களுந் திறந்தவரவர்க்குப்
பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு.
அடைக்கலன் யேசுவை அறிந்தவர் நாமம்,
அழிந்திடாதவர்களின் வாழ்வது க்ஷேமம்;
படைத்திடுவாயிந்தக் கணமுனை, ஷாமம்
பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம்.
Details
- Numeric ID
- 6380
- Song ID
- vaiyagam-thannai-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0