Lyrics
வழியுமானவர் ஒளியுமானவர்
வாழ்வைக் காட்டுவார்
வேலியுமானவர் விளக்கானவர்
வாழச் செய்யுவார்-2
கலங்காதே திகையாதே
கர்த்தர் உந்தன் துணையானார்-2
1. யோர்தான் நதி உந்தன்
வாழ்வில் புரண்டு வந்தாலும்
செங்கடல் உம்முன் எதிர்த்து நின்றாலும்
இரண்டாக பிளந்தவர் - எல்லாம்
உன் வாழ்வில் மாற்றிடுவார்
2. வறுமை நோயும் உந்தன்
வாழ்வை வாட்டுகின்றதோ
வாதை துன்பம் உந்தன்
வாழ்வை விரட்டுகின்றதோ
வாடாதே ஓடாதே
இயேசு உன்னை தேடுகிறார்.
3. கண்ணீர் கவலை உந்தன்
வாழ்வை கலங்க வைத்ததோ
கடன் பாரம் உந்தன்
நெஞ்சை திகைக்க வைத்ததோ
கலங்காதே திகையாதே
இயேசு உன்னை தேற்றிடுவார்
Details
- Numeric ID
- 1769
- Song ID
- valiyumaanavar-olimayamana-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0