Lyrics
வல்லமையின் தேவனே நன்றி ஐயா
என்னை வாழவைக்கும்
தெய்வமே நன்றி ஐயா
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
1. கலங்கி நின்ற போதெல்லாம் கண் துடைத்தீர்
கண்ணீரை துருத்தியில் பிடித்து வைத்தீர்
கண்ணீரை விசாரிக்கும் காலம் வரும்
அது வரை உம் கரத்தில் அடங்கியிருப்பேன்
2.பலகோடி தெய்வங்களை நம்பினேனே
நீர்தான் அன்பான தெய்வம் என்று தெரியாமலே
வாழவைத்த தெய்வமே நன்றி ஐயா
என்னை தாங்கி தினம் நடத்தியது உம் கிருபை ஐயா
3. கர்த்தா உம் வருகைக்காய் காத்திருப்பேன்
கரம்பிடித்து அழைத்துச் செல்லும் என் தெய்வமே
ராஜா உம் சிங்காசனம் பார்க்கணுமே
உம் மடியில் அமர்ந்து தினம் துதிக்கணுமே
Details
- Numeric ID
- 1806
- Song ID
- vallamaiyin-devane-nandri-ayya-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0