Lyrics
வண்ண மலரே இயேசு ராஜனே (2)
எண்ண சிறைதனிலே உம்மை சிறையாக்கினேன்
கண்ணின் ன் இமைகளுக்குள்
இமைகளுக்குள் உம்மை நான் பூட்டினேன்-2
1. பூந்தோட்டம் தன்னிலே உந்தனின் வாசம் உள்ளே நடக்கையிலே
பூவுக்குள் தேன் போல உந்தனின் நாமம் ருசித்து பார்க்கையிலே-2
பாரினிலே வாழ்வினிலே பக்கத்தில் வந்தவரே-2
இது புரியாத நேசம் விலகாத பாசம்
உடையாத அன்பை நான் அடைந்தேனே இன்று
2. சுட்டெரிக்கும் வெயில் சுற்றிலும் கண்டேன் பாலைவனத்தினிலே
கட்டுக்கடங்காத அன்பையும் கண்டேன் கர்த்தரின் மார்பினிலே
தாகத்திலே சோகத்திலே என்னை தாங்கி அணைப்பவரே
எந்தன் துன்பத்தின் நேரம் உந்தன் அன்பு ஒன்றே போதும்
எந்தன் தாகத்தின் நேரம் ஜீவ தண்ணீரை தாரும்
Details
- Numeric ID
- 2048
- Song ID
- vanna-malare-yesu-rajane-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0