Lyrics
வருவீர் மனமகிழ அரசே
வருவீர் விரைவாய் ஆசிகள் தருவீர்
1. அருள்மாரி அளித்திடவே ஆ ஆ
காரிருள் அகற்றிடவே
பாரில் பாவிகள் பரனடி பணிய
2. இயேசுவின் நாமமதை ஆ ஆ
நேசர்கள் உயர்த்திடவே
பேசுமடியார் பெலனடைந்திடவே
3. உன்னத பெலனீய ஆ ஆ
வன்மையுடன் நடக்க
கன்மலையும்மை பின் தொடர
4.ஆதிச் சபையது போல் ஆ ஆ
ஆவியின் வரங்களினால்
அலங்கரித்தெம்மை ஆட்கொண்டருள
5. தூயனுமைத் துதிக்க ஆ ஆ
தூய்மை அகம் தரிக்க
காலம் முழுவதும் உமக்கே படைக்க
6. ஆயத்தமாகிடவே ஆ ஆ
நாயகன் வருகையிலே
மாயமான யாவையுமகற்ற
Details
- Numeric ID
- 1812
- Song ID
- varuveer-manam-yesuve-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0