Lyrics
வற்றாத நீர் ஊற்றாய்
வாழ்வில் நீர் வந்து
வர்த்திக்கச்செய்பவரே
வளமான தோட்டம் போல்
வாழ்க்கையே மாறிடுதே
இனி குறைவொன்றும் எனக்கில்லையே
1) இதுவரை நிரம்பாத
வெடிப்புள்ள பாத்திரத்தின்
விரிசல் சீராக்கினீர்
நீர் என்னை ஏந்தியதால்
(என்னை) கையேந்த விடவில்லையே
என்னை (மீண்டும்) நிரப்பிடும் ஊற்றாய் வந்தீர்
2) சுற்றி வனாந்தரம் போல்
இருந்த நிலை மாற
கன்மலை ஊற்றாய் வந்தீர்
பேரின்ப நதி பாய்ந்ததால்
வளமான நிலமாகுதே
எங்கும் நிறைவான பலன் காண்கிறேன்
பெருக செய்பவர் நீரே
நிரம்ப செய்பவர் நீரே
Details
- Numeric ID
- 477
- Song ID
- vatraadha-neer-ootraai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0