Lyrics
நின் பாதம் துணை அல்லால்,
வேறொரு துணை இல்லை (2)
நித்ய பரம போதா(2)
என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ,
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா (2)
ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்
ஜாதி அனைத்தும் உய்ய, நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில்
இறந்தீர் (2)
வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும்
சிறந்தீர் (2)
ஏதம் இல்லாத அநாதி திருமகனே (2)
எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா (2)
தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும், சித்தம் இரங்கி
வாரும்;மேவி எனது வினையாவும் அகல இந்த வேளை எனையும் காரும்; (2)
பாவிக்குதவியாக, மனுவேலே, நீர் பட்ட பாடனைத்தையும பாரும்
ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன் (2)
ஆபத்தை நீக்கும், ஐயா, இப்போதே மெய்யாய் (2)
Details
- Numeric ID
- 795
- Song ID
- vearoru-thunai-illai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0