Lyrics
வேதமே என்ன சொல்லுவேன் நின் மாட்சியை
சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப்
பாதமுறும் நெறி யோது மொரே சத்ய
கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம்
காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம்
புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம்
புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம்
சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார்
தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார்
அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார்
அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார்
கனபல மருளுவாய் தினந்தினங் காலை
களைப்பினைப் போக்குவாய் களைப்புறு மாலை
தினமென திதயமே திருத்தலுன் வேலை
செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை
அகமுறு மானைகள் விழுந்து தள்ளாடும்
அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும்
தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும்
தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும்
பொன் அபரஞ்சியிலும் உன் விலை பெரிதே
பூவுலகினிலுனக் குவமைக ளரிதே
நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே
நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே
இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே
இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே
கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே
கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே
Details
- Numeric ID
- 6358
- Song ID
- vedhamae-enna-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0