Vegu Pergalukinbamaana Song Tamil Christian Keerthanai Song
Lyrics
வெகு பேர்களுக் கின்பமான மேதினியே நீ என்றனுக்கு
மிகவும் திகில் கசப்பாம்பர தேசம் இது மெய்யலோ
ஜெகந்தன்னைமா ஆசையாய்ப் பற்றும் ஜெகத்தோரத்தால் வாழட்டும்
தேவரீருட பேரிலே மெத்தத் தேட்டமாகினேன் யேசுவே
யேசு நீர் தரிசினை தந்தெனை யேற்கும் நன்மைக்காய் யாவையும்
எளியேன்வெறுத் திந்தலோகத்தின் இன்பவாழ்வினைக் குப்பையாய்
மோசமென்றுநா னெண்ணுவேன் நீரென் மோட்சமும் கதி ஆஸ்தியும்
முன்னவா அடியே னும்மோடென்றும் முற்றுங்கூடினால் பாக்கியன்
இந்த ஏழைச் சரீரமாமண்ணை இளைப்பாறிட மண்ணினில்
ஏற்கவேகொண்டு போய்ப்புதைத்திடும் காலம் எய்திடில் நல்லதே
அந்தநாளினி லெந்தன் பாடுகள் அத்தனைக்கும் முடிவுண்டாய்
ஆவி உம்மிடம் தங்கப்போகுமே ஐந்து காயத்தில் ஏசுவே
வாராய் நித்திரையின் தோழனே சாவே என்னைக்கொண்டுபோ
வாகாய்கப்பல் தாவில்ஓட வழியே திருப்பாயோ
பாரோர்திகி லானாயிந்த பக்தன்மகிழ் வானாய்
பரன்யேசுவின் பரஞ்சேரநற் பாதை யெனக்கானாய்
Details
- Numeric ID
- 6360
- Song ID
- vegu-pergalukinbamaana-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0