Lyrics
விடாக் கண்டன் கொடாக் கண்டன் வாழ்க்கை வாழாதே உன்
பிடிவாத குணத்தால் அழிந்து போகாதே
அடிக்கடி கடிந்து கொண்டும்
கடினப்படுத்தும் மனிதன்
சகாயமின்றி சடுதியிலே நாசமடைவான்
ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்த
ஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம்
புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீ
புசிக்கும் நாளில் சாவாயே என்றார் தேவனே – கனி
புழுபழுத்தக் கனி அழித்த பலன்
உலகில் வந்த – பாவம்
புழு புழுத்த மனிதன் அழிந்து போனான்
அதினால் வந்த சாபம்
விடாக் கண்டன்
ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வு
வீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாது
அலையாதே அலையாதே எந்தன் மகனே – நீ
அலைவதினால் கிடைக்கும் பலன் மரணம் தானே
நீ ஓடி ஓடி உழைச்சாலும் நிக்கிறது தான் நிற்கும்
நீ விழுந்து விழுந்து உருண்டாலும்
ஒட்டுறது தான் ஒட்டும்
விடாக் கண்டன்
ஆராதனையில் ஒழுங்கா கலந்துகொள்ளணும் – தேவ
ஆவியிலே நிரம்பி ஜெபித்துப் பழகணும்
மறவாதே மறவாதே எந்தன் மகனே – நீ
மறந்தாலும் வாழ்வு இல்லை எந்தன் மகளே இதை
நித்திய சத்திய சுத்த மகத்துவ வாழ்க்கை வாழ வேண்டும்
உத்தம புத்திர தேவ நாமம் உயர்த்தப்பட வேண்டும்
Details
- Numeric ID
- 271
- Song ID
- vidaak-kandan-kodaak-kandan-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0