Lyrics
விண்ணிலே ஆயிரம் தூதர்
மண்ணிலே ஆயிரம் மாந்தர்
விண்ணையும் மண்ணையும் சிருஷ்டித்த தெய்வம்
புல்லணையில் வந்து பிறந்தார்-(2)
கடலின் அலைகளும் காற்றின் அகோரமும்
அமர்த்தும் வல்லமை இருந்தும்
கீழ்ப்படியா இந்த மாந்தரை மீட்க
தேடிவந்தார் இந்த புவியை
அவர் நாடிவந்தார் இந்த நரரை
ராஜாக்கள் அவரை தேடி வந்தாரே
ராஜனோ புல்லில் கிடந்தார்
மேய்ப்பர்கள் அவர்க்காய் மந்தையை மறந்தார்
மேசியாவைக் காணச் சென்றார்
நாம் யோசனையாய் பின்னே செல்வோம்
ஏரோது நடுங்க பாருள்ளோர் பதற
தன்னையே அளித்த மெய் தியாகன்
அழைக்கிறார் உன்னை அருள் வாழ்வு தரவே
அளிப்பாயோ உன்னையே இன்று
அவர் ஏற்பாரே காணிக்கையாக
Details
- Numeric ID
- 1029
- Song ID
- vinniley-aayiram-thoothar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0