Virundhai Seyrumeyn 154 Pamalai Song Lyrics
Pamalai Song Lyrics
Lyrics
1. விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்;
ஆகாரம் பாருமேன், போஷிப்பார்;
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா, பாவி, வா.
2. ஊற்றண்டை சேரவும், ஜீவனுண்டாம்;
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்;
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று;
ஜீவாற்றின் அண்டைக்கு
வா, பாவி, வா.
3. மீட்பரின் பாதமும் சேராவிடில்,
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்;
இயேசுவே வல்லவர்,
இயேசுவே நல்லவர்,
இயேசுவே ஆண்டவர்;
வா, பாவி, வா.
4. மோட்சத்தின் பாதையில் முன் செல்லுவாய்;
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?
வாடாத கிரீடமும்
ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா, பாவி, வா.
5. சேருவேன் இயேசுவே, ஏற்றுக் கொள்வீர்;
பாவமும் அறவே சுத்தம் செய்வீர்;
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்.
Details
- Numeric ID
- 5468
- Song ID
- virundhai-seyrumeyn
- Views
- 0
- Downloads
- 0