Lyrics
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்
நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர் முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர்
உய்யும் வகையறியோம் பெலனேயில்லை நரர் செய்யும் கிரியைகளில் நலனேயில்லை
பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம் எச்
சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம்
தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும் அவர் மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும்
நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும் அவன் பாதகம் பழிமரணம் யாவுமே போகும்
தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான் தீய பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான்
Details
- Numeric ID
- 6355
- Song ID
- visuvasathaal-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0