Lyrics
1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
தம் வேலை முடித்தோர் நிமித்தமே
கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம்
அல்லேலூயா! அல்லேலூயா!
2. நீர் அவர் கோட்டை, வல் கன் மலையாம்;
நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்;
நீர் காரிருளில் பரஞ்சோதியாம்.
அல்லேலூயா! அல்லேலூயா!
3. முன் நாளில் பக்தர் நற்போராடியே
வென்றார்போல் நாங்கள் வீரராகவே
பொற்கிரீடம் பெற்று கொள்வோமாகவே.
அல்லேலூயா! அல்லேலூயா!
4. இங்கே போராடி நாங்கள் களைத்தும்
உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்;
யாவரும் உம்மில் ஓர் சபை என்றும்
அல்லேலூயா! அல்லேலூயா!
5. போர் நீண்டு மா கடூரமாகவே
கெம்பீர கீதம் விண்ணில் கேட்குமே;
நாம் அதைக் கேட்டுத் தைரியம் கொள்வோமே
அல்லேலூயா! அல்லேலூயா!
6. செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்;
மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்;
சீர் பரதீசில்பாக்கியம் அமையும்
அல்லேலூயா! அல்லேலூயா!
7. மேலான பகல் பின் விடியும் பார்!
வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்;
மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார்.
அல்லேலூயா! அல்லேலூயா!
8. அநந்த கூட்டம் நாற்றிசை நின்றும்
திரியேகருக்கு ஸ்தோத்ரம் பாடியும்,
விண் மாட்சி வாசலுள் பிரவேசிக்கும்
அல்லேலூயா! அல்லேலூயா!
Details
- Numeric ID
- 5466
- Song ID
- visvaasathodu
- Views
- 0
- Downloads
- 0